அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: பெரியார்-அண்ணா பேரவை :::

15.09.2009 பெரியார் - அண்ணா பேரவை - கவரப்பாளையம்
கவரப்பாளையத்தில் அமைந்துள்ள பெரியார் அண்ணா பேரவை, அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை 15.09.2009 அன்று கொண்டாடியது. இதில் தந்தை பெரியாரின் சிலையை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அவர்களால் திறக்கப்பட்டது. திருச்சி கே.சவுந்தரராசன் அவர்கள் தலைமையிலும், முனைவர்.இரா.மணியன் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் திருச்சி வீ.சந்திரன் வரவேற்புரையாற்றினார். திரைப்பட இயக்குநர் சீமான் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாலை 4.00 மணிக்கு சிற்பு இராசன் குழுவினரின் "மந்திரமில்லை, தந்திரமே" என்ற அறிவியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியார் சிலை அமைப்புக்குழு செயலாளர் திரு.கே.ச.அன்புச்செல்வன் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுபெற்றது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.